நம் ஊரில் மழை
பெய்யும்போது இடி இடித்தால் போதும்.அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள்பெரியவர்கள். உடனே, நம்வீட்டு
இளசுகள்,நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே,அவன்வில்லையும்
அம்பையும்எடுத்துகிட்டு வந்து,இடி சத்தமே இல்லாம
பண்ணிடபோறானாக்கும்என்று கேலி செய்வார்கள்.
உண்மையில், உண்மையானஅறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது,சிலரது காது அடைத்து ஙொய்ங்என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்பஅர்ஜுனா என்றால் போதும்.காது அடைக்காது. அர்
என்று சொல்லும்போது, நாக்கு மடிந்து மேல்தாடையைத்தொடும். ஜு என்னும் போது வாய்குவிந்து காற்று வெளியேறும்.னா என்னும் போது, வாய்முழுமையாகத்திறந்து காற்று வெளியே போகும்.இப்படி காற்று வெளியேறுவதால்
காது அடைக்காது. அதற்குத்தான்அர்ஜுனா வை நம்மவர்கள்துணைக்கு அழைத்தார்கள்.அர்ஜுனன்கிருஷ்ண பக்தன் என்பதால், அவன்பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம்என்ற ஆன்மிக காரணத்துடன்,காது அடைத்து விடக்கூடாது என்ற
அறிவியல் காரணமும் இதில்புதைந்து கிடக்கிறது. இனிமேல்,இடி இடித்தால் அர்ஜுனா கோஷம்,இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்!
Comments
Post a Comment