Skip to main content

நீண்ட காலம் வாழ ஆசையா…?

இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம்.
ஒரு நாளில் 11 மணி நேரம்வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில்உயிரை விடும் ஆபத்து அதிகம்என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு.

ஆஸ்திரேலியாவின்சிட்னி பல்கலைக்கழக பொதுநலமருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட்வான் டெர் பிளாஜ்.இவரது தலைமையில்ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம்பேர் பங்கேற்றனர். அதன்அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ
இதழில் வெளியானது. அதில்இடம்பெற்ற விவரங்கள்.நீண்ட நேரம் உட்கார்ந்திருப்
பதே பல்வேறு உடல்பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.பருமன், டயபடீஸ்
ஆகியவை அவற்றில்முக்கியமானவை. ஒரு நாளில் 4மணி நேரத்துக்கு குறைவாக
உட்கார்ந்தே இருப்பவர்களுடன்ஒப்பிடுகையில், 11மணி நேரத்திற்கு அதிகமான நேரம்உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும்பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40
சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில்உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல்உழைப்பு, எடை, உடல் ஆரோக்கியநிலை ஆகியவற்றின் அடிப்படையில்துல்லியமாக நடத்திய ஆய்வில்இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய்உடற்பயிற்சி செய்வது, நீண்டநடை பயிற்சி ஆகியவையும்அவசியம்தான். ஆனால், அவற்றை விடமிக முக்கியமானது நீண்ட நேரம்ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது.உட்கார்ந்தே இருந்தால் பல உடல்பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில்எத்தனை முறை முடியுமோ 20 முதல்30 வினாடிகள்
வரை எழுந்து நிற்கலாம். போன்பேசும் போது நிற்கலாம். லிப்ட்,எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில்ஏறலாம். இமெயில் , இன்டர்காம்தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில்சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சிலநிமிடங்கள் நடக்கலாம்.குறைந்தபட்சம் உட்கார்ந்த
பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து,நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள்
அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.


* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம்2006,10 வரை 5ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

* ஒரு நாளில் 3 மணி நேரம்வரை உட்கார்ந்திருப்பவரை விட 6மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.


* பணி நேரம்மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில்90 சதவீத நேரத்தை பெரும்பாலோர்உட்கார்ந்தே செலவிடுகின்றனர்.இது ஆபத்தானது....

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...