Skip to main content

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?



1. எழுத்திலக்கணம்(அக்ஷரஇலக்கணம்);

2. எழுத்தாற்றல் (லிபிதம்);

3. கணிதம்;

4. மறைநூல் (வேதம்);

5. தொன்மம் (புராணம்);

6. இலக்கணம் (வியாகரணம்);

7. நயனூல் (நீதி சாத்திரம்);

8. கணியம் (சோதிட சாத்திரம்);

9. அறநூல் (தரும சாத்திரம்);

10. ஓகநூல் (யோக சாத்திரம்);

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);

16. மறவனப்பு (இதிகாசம்);

17. வனப்பு;

18. அணிநூல் (அலங்காரம்);

19. மதுரமொழிவு (மதுரபாடணம்);இனியவைபேசுதல்/வசீகரித்தல்

20. நாடகம்;

21. நடம்;

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);

23. யாழ் (வீணை);

24. குழல்;

25. மதங்கம் (மிருதங்கம்);

26. தாளம்;

27. விற்பயிற்சி (அத்திரவித்தை);

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);

30. யானையேற்றம் (கச பரீட்சை);

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);

33. நிலத்து நூல்/மண்ணியல்(பூமி பரீட்சை);

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம���);

35. மல்லம் (மல்ல யுத்தம்);

36. கவர்ச்சி (ஆகருடணம்);

37. ஓட்டுகை (உச்சாடணம்);

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);

39. காமநூல் (மதன சாத்திரம்);

40. மயக்குநூல் (மோகனம்);

41. வசியம் (வசீகரணம்);

42. இதளியம் (ரசவாதம்);

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவவாதம்);

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீலவாதம்);

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);

47. கலுழம் (காருடம்);

48. இழப்பறிகை (நட்டம்);

49. மறைத்ததையறிதல் (முஷ்டி);

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);

51. வான்செலவு (ஆகாய கமனம்);

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல்(பரகாயப் பிரவேசம்);

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);

54. மாயச்செய்கை (இந்திரசாலம்);

55. பெருமாயச்செய்கை(மகேந்திரசாலம்);

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம���);

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) ;

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)«

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...