Skip to main content

குழந்தை நலத் துறையில்பதறவைக்கும் ஒரு சொற்றொடர்,

Sudden infant death syndrome.

காரணமே இல்லாமல் திடீரென நிகழும்பச்சிளம்குழந்தை இறப்பு.அமெரிக்கா போன்ற வளர்ந்த
நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால்குழந்தை இறப்புகள் ஏராளம்.பெற்றோருக்குப் பக்கத்தில்
குழந்தையைப் படுக்கவைப்பதும்கூடஇந்த இறப்புக்கு முக்கியமானகாரணம் என்பதை, சமீபத்திய
ஆராய்ச்சி மூலம்அறிந்துள்ளது அமெரிக்கக்குழந்தைகள் நல அமைப்பு.உடனே அந்த அமைப்பின்
ஆய்வாளர்கள் அவசர அவசரமாக,குழந்தைகள் பாதுகாப்பாகத்தூங்குவதற்கான பழக்கத்தை (safe
sleep practice) வெளியிட்டனர்.அதன்படி, தூங்கும் இடம்காற்றோட்டமாக இருக்க வேண்டும்,
முதுகு அழுந்தும்படியாக குழந்தைவேண்டும்.வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப்
படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில்புரண்டுவிடாது இருக்க,அணைக்கும்படியாக மிருதுவான
பருத்தித் துணி படுக்கை அவசியம்...என அந்தப் பட்டியல் நீண்டது.ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம்
பல தலைமுறைகளாகஇன்னொரு பெயர் உண்டு...அது தொட்டில் அல்லது தூளி!


'கொவ்வை இதழ் மகளே – என்குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்

எனத்தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000வருடங்களாக நம்மிடம் உண்டு.ஆனால், தூளியில் குழந்தையைப்போட்டு,நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தை
கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன்சிந்தனையை ஒருமுகப்படுத்தி,கவனத்தை நிலைநிறுத்திய சில
மணித்துளிகளில், அந்தக்குழந்தை தன்னை மறந்து தன்நாவை ஆட்டிப் பார்த்து, பின்
அப்படியே பாடலின் ஒலியில்சொக்கி உறங்கும். இந்த அற்புதப்பண்பாடு இப்போது கொஞ்சம்
கொஞ்சமாகக் காணாமல்போய்வருகிறது. வழக்கமாகஅம்மாவின் பழைய பருத்திச்
சேலைதான் தூளி செய்யும் துணி.அன்னையின் மணத்துடன்,இருபக்கமும் பருத்திப் புடவையின்
அணைப்பில் முதுகில்மட்டுமே படுக்க முடியுமானதொட்டிலின்துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில்
கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள்.காற்றில்ஆடும்போது சுருண்டுகொண்டு,உள்ளே காற்று இறுக்கம்
வந்துவிடாமல்,தொட்டிலை எப்போதும் விரித்திருக்கஉதவும் அந்தக் கம்பு.அதை அங்கு வைத்த
பாட்டிக்கு சத்தியமாக Sudden infantdeathsyndrome பற்றி தெரியாது.safe sleep practice குறித்து தேடஅப்போது இணையம் என்றஒன்றே இல்லை.இன்றைய அறிவியலின் தேடலுக்குச்சற்றும் குறைவில்லாத உலக
நாகரிகத் தொட்டிலான தமிழ்மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான்,தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில்
தங்காமல் ஓடும் இந்தத்துணித்தூளியில், அதன்தொங்கி ஆடும் குணத்தால், பூரான் -பூச்சிகளும் ஏறாது.
குழந்தைகளுக்கு உணவு புரையேறிகாக்கும் படுக்கை நுட்பமும்தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம்
குலப்பெருமையும்,குசும்பு எள்ளலும், உறவின்அருமையும் என எல்லாம்ஏற்றி தூளியில்தாலாட்டு பாடி அமைதியாகஉறங்கவைத்தும், ஆர்ப்பரிக்கஎழுந்து நிற்க வைக்கவும், களம்அமைத்தது தொட்டில்பழக்கம்
மட்டும்தான். நகரங்களில் பழையபேன்ட்டை ஆணியில்மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில்
குழந்தையை ஒரு பையில் போட்டுத்தொங்கவிட்டிருப்பதைப்பார்க்கும்போதும், '20 ஆயிரம்
ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்;நெட்டில் ஆஃபர் வந்திருக்குஎனப்பேசுவதைக் கேட்கும்போதும்,
இன்னும்எத்தனை விஷயங்களை இப்படித்தொலைக்கப் போகிறோமோ என மனம்
பதறுகிறது...!!!

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...