Skip to main content

மனித உடம்பில்இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்!ஆச்சர்யம்!!!


1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின்உடலில் மொத்தம் 206 எலும்புகள்உள்ளன. ஆனால் அவன் குழந்தையாகஇருக்கும் போது அவனுடைய உடலில்300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்றஎலும்புகளுடன்இணைந்து விடுகிறது.

2. நாம் 6விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள்கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள்,இரண்டு கண்கள், இரண்டு காதுகள்,இரண்டு கைகள் இவைகள்ஒரே அளவாக
இருப்பதில்லை காரணம்கருவில்சிசு வளரும் போது அதன் உறுப்புகள்ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச்சிறிய வத்தியாசம் தான்நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது.நம் இடது கால் செருப்பை விட
வலதுகாலின் செருப்பு வேகமாகதேய்வது கூட இந்தசிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரணஉறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம்வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4நாட்களை வரை செயல் படுகிறது.தோல் தொடர்ந்து 5 நாட்கள்வரை பணி செய்கிறது. கண் மற்றும்காது தொடர்ந்து 6 மணி நேரம்பணி செய்கிறது தசைகள்ஒரு மணி நேரம் செயல்படுகிறது.அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6மணி நேரம் செயல்படுகிறது. ஆகஅவனது உயிர் பிரிந் தாலும்அவனது உடல் உறுப்புகளின்செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. இது தவிரமாதவிடாய் பிரச்சனைகள் உள்ளபெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)அமைந்து விடுகிறது. பெண்கள்இது விஷயத்தில் கவனம் கொள்ள
வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர்சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர்உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்செய்யும்போது தண்டு வடத்திலுள்ளகுறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாகஅழுத்துகின்றன. இதனால் உயரம்குறைகிறது. இரவில் எவ்வித
விறைப்புத் தன்மையும் இல்லாமல்படுத்து உறங்குவதால்நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின்ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன்பிறகு அது மடிந்து விடும்.
புது சிவப்பணுக்கள் உருவாகும்.இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம்வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.அவை ஒரு நாளில் சராசரியாக 5
லிட்டர் முதல் 6 லிட்டர்வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம்வேகமாகவும், கட்டை விர லில் நக ம்மெதுவாகவும் வளர்கின்றன.
நம்முடைய உடல் பாரத்தால் கை விரல்நகத்தைவிட கால்விரல் நகம்மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும்போது அசையாமல் தூங்குவதில்லை,சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்த
ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

11. நம்முடைய உடல்தோலின் பருமன்மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப்பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராகஉள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாகவேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமானபாகம் தாடை எலும்பு.

14. மனித மூளை 80 முதல் 85சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமானஇயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைகளின்எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன.அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ.
வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520வகைகளுக்குள் அடக்கி விடலாம்.

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக்காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18
லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும்போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர்மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில்பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு,ஆல்கஹால் போன்றவற்றால்பாதிப்படைகிறது.
24.பெண்களைவிடஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.பெண்களை விட சுமார் 4000உயிரணுக்கள் ஆண்கள் மூளையில்இருக்கிறது.

25. மனித உடலில் மிகப்பெரியஉறுப்பு தோல்.
26. நமது தலையின் எடை 3.175கிலோ கிராம்.

27. மூளையின்100கோடி நியூரான்கள் நமக்கு 4வயதுக்குள் கிடைத்து விடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள்தான் பெரும் பங்கு அளிக்கிறது.மனிதனை ஒத்த உருவம் கொண்டசிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்கிடை யாது.

29. மூளையின்மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது
.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம்30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27கிலோ கிராம்.

33. மனித உடலில் 33முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை,கல்லீரலை, முழங்காலை மாற்றலாம்.ஆனால் மூளையை மட்டும்
மாற்றவே முடியாது. காரணம்ஞாபங்கள், நினைவுகள்,எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும்,
மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான்அவன் அந்நியன் தான்.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்கஇரண்டு வகையான ஈரம்தேவைப்படுகிறது. கண் இமைகள்
தான் நம் வைப்பர்கள். அவற்றின்விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன.கண்சிமிட்டும் போதெல்லாம்
கண்விழி இவற்றின் மூலம்அலம்புகின்றன. அழுது கண்ணீர்விடும் போது கண் விழிமேல் இருக்கும்
சுரப்பிகளிலிருந்து கண்ணீர்வினியோகம் ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள்பிரிந்து இரண்டாகும்தன்மையு டையது.ஒரு நாளைக்கு நம் உடலில் 60
கோடி செல்கள் இறந்து புது செல்கள்பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4வருஷம் வரை வளர்கி றது. அதன்பின்3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்வளர்கிறது.

38. ஓர் அடி எடுத்து வைக்கஉடலெங்கும் 54 தசைகள் பணிபுரியவேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும்ஒரு மனிதனின் இதயம் 250கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்குஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்கபொறாமை, கெட்டசிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள்அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தான்மூளைக்குத்தகவல்களை அனுப்புகிறது.அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம்தகவல்களை அனுப்புகிறது.

41. நமது உடலின் நீளமானஎலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம்நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும்பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும்வலியை நம்மால் உணரமுடியாது.ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாதபகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்பொருளையும் 11 ஆயிரம் காலன்திரவத்தையும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில்ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும்பால்உருவானது அல்ல, 22 எலும்புகளில்உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம்முடிக்கால்கள் உள்ளதாகவும்,பெண்களின் முடியை விட ஆண்களின்
முடி வளர்ச்சி விரைவானது என் றும்அறியப்படுகிறது.

51. ஆரோக்கியமான மனிதன் 7நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500கன சென்டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல்தொகுதி 5000 முதல் 6000வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாகஇவ்வளவு வார்த்தைகளைத்தான்பயன்படுத்துகிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்தநாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040தடவை சுவாசிக்கின்றோம்.

57. மனிதனின் உடலிலுள்ளகுரோமோசோம்களின் எண்ணிக்கை 46(23 ஜோடி)

58. நாம் பேசக்கூடியவார்த்தை க்கு 72 தசைகள்வேலை செய்ய வேண்டும்.பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம்துவாரங்களையும் இரத்தகுழாய்களையும் கொண்டதாக
இருக்கிறது. இவைகளின் நீளம் 2400கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள்முழுவதும் வளரும்.

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பானநீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி,சோர்வு, வாந்தி, வயிற்றுப்
போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்எச்சிலை ஊறச் செய்கிறான்.1.14லிட்டர்வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம்அல்லது ஒரு யோசனையின் தூரம்என்று சொல்லுகிறோம் இந்த தூரம்
150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிடபெண்ணின் இதயம் அதிகமாகதுடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்நுனிவரை உள்ள நீளமும், மேவாய்கட்டையிலிருந்து
நெற்றி உச்சி வரை உள்ள நீளமும்எல்லாருக்கும் சமமாக இருக்கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின்விந்தில் 30 கோடி உயி ரணுக்கள்வரை இருக்கும்.

69. உடலில் உண்டாகும் உஷ்ணம்வெளியேறிவிடாமல்தடுக்கவே ரோமம் உள்ளது.

70. இதயத்திலிருந்து புறப்பட்டஇரத்தம் உடல் முழுவதும்ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.

71. மண்ணீரலில் சுரக்கும்ஒரு வகை நீர் ரத்தத்தில்கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால்தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின்அளவு 6 கிராம் ஆகும்.


73. ஆட்ரினல்சுரப்பி அளவுக்கு அதிகமாகநீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.

74. தானாகமூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்ஏற்படும்படி செய்ய எவராலும்
முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும்செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால்நாயின் மூக்கில் 22கோடி நுகரும்செல்கள் உள்ளன. அதனால் மோப்பசக்தி அதிகம். காவல் துறையில்
வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ்தான். அவரவர் கைவிரல் 5 யையும்பொத்திப் பார்த்தால் என்ன
அளவு இருக்குமோ அதே அளவு தான்அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம்அமைந்துள்ள ஆலவியோலிஎன் னும்சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.

78. மூளை 65 சதவீதம்கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள்உண்டு.

81. நமது நாக்கில் சுவை உணரும்மொட்டுக்கள் 9000 உள்ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6தசைகள் உள்ளன.

83. எலும்புகளின்துணை இன்றி தானே அசையும்தசை நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால்உருவான பகுதி மூளை,மூளையின்வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன்செல்களால் உருவானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23வருஷம் தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள்சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த
முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ளமனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம்உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாதவிடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார்1லட்சம் தடவை லப்டப் செய்கி றது.வருஷத்திற்கு 4 கோடி தடவை.

90. நமது தோலின் பரப்பளவு சுமார்20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக்கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள்செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக்கொண்டு 900பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக்கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.

94. மனித உடலின் இரும்பைக்கொண்டு 2 அங்குலஆணி ஒன்று செய்யலாம்.


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...